Friday, 4 November 2016

விதைப்பந்து

விதைப்பந்து வீசலாம் வாங்க....

டாக்டர் சிவகுமரன்

நாடுகளின் மீது போர் வந்தால் குண்டு வீசுவார்கள்...

பூமிப்பந்து மீது அன்பு வந்தால் விதைப்பந்து வீசுங்கள்.....

எப்படி?!!!!!!!!

இது எளிது தான்....

எளிய வழியில் அதிகமாக மரங்கள் வளர்க்க ஒரு வழி...

விதைப்பந்து என்பது...மண் மற்றும் பசுஞ்சாணத்தால் ஆன உருண்டை.

இது பயன்தரும் மரங்களின் விதைகளை பொதிந்து உருவாக்கிய பந்து...

விதைகளை சேகரித்து ,அதை பாதுகாத்து அதனை இயற்கை எறிகுண்டுகளாக பரவலாக்கிய மிகவும் தொன்மையான எகிப்திய நாட்டு விவசாய முறையாகும்.

இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஜப்பான் நாட்டில் விளைநிலங்களைத்தவிர்த்து எரிமலை சாம்பல் படிந்தபகுதியில்விதைப்பந்துகளை வானிலிருந்து தூவியே காடுகளை உருவாக்கினர்.

விதை பந்துகளை தயாரிக்க தேவையான
பொருட்கள் :

1. செம்மண் அல்லது களிமண்

2. தரமான பலன்தரும் விருட்சங்களின் விதைகள்.

3. பசுஞ்சாணம்

4. நீர்

செய்முறை :

செம்மண்ணில் பாதியளவு சாணத்தை கலந்து நீரூற்றி பிசைந்து உருண்டையாக உருட்டிக் கொள்ள வேண்டும். அதன் நடுவே நீங்கள் சேகரித்த விதைகளை வைத்து உருண்டையாக்கி விடுங்கள்.

முதலில் நிழலில் உலர்த்தி பிறகு வெயிலில் ஒரு நாள் காயவைக்கவும்.

இதனால் உருண்டைகளில் வெடிப்பு வராது.

சூரிய வெப்பத்தில் ஒரு நாள் காய்ந்தால் அது இறுகி விடும்.

நீங்கள் வெளியே செல்லும் போது மரம் நட வாய்ப்புள்ள இடங்களில் வீசி செல்லுங்கள்.

அவ்விதை மழை வரும்வரை எலி, எறும்பு, பறவைகளிடமிருந்து பாதுகாப்பாய் இருக்கும்.

ஒரு வருடம் வரை விதை பத்திரமாக முளைக்க ஏற்றதாக இருக்கும்.

விதைகளைப் பொருத்தவரை சில நாட்களுக்கு முளைக்க தேவையான சத்துக்கள் விதையிலேயே இருக்கும்.

மண்ணில் கலந்துள்ள சாணமானது, மண்ணில் நுண்ணுயிர்களை உருவாக்கி செடியின் வேர் மண்ணில் எளிதில் செல்ல ஏற்ற வகையில் இலகுவாக்கி விடும்.

மண்ணின் கடினத்தன்மையை அகற்றி மிருதுவாக்கி விடும். சாணத்தை உண்ணும் நுண்ணுயிர்களின்கழிவை செடியின் வேர் உண்டு... தன்னை அம்மண்ணில் நிலைப்படுத்திக் கொள்ளும்.

ஆனால் வெறும் விதைகளை விதைத்தால் அவை மற்ற உயிரினங்களால் உணவாக்கப்படலாம். வெப்பத்தால் தன் முளைக்கும் தன்மையை இழந்து விடலாம்.

நிலமானது செடி வளர்வதற்கான ஏற்றதாக இல்லாமல் கடினமானதாக இருக்கலாம். அதனால் விதை முளைக்காது. ஆனால் விதைப்பந்தில் தண்ணீர் பட்டவுடன் இலகுவதுடன் நுண்ணுயிர்களை உண்டாக்கி நிலத்தை இலகுவாக்கி விடும்.

எனவே உங்கள் வீடுகளில் சிறிது செம்மண் மன்றும் சாணத்தை சேகரித்து வையுங்கள்.

பழங்களை சாப்பிட்ட பின் நல்ல விதைகளை எடுத்து சேகரித்து வையுங்கள்.

ஓய்வு நேரத்தில் விதைப்பந்தை உருவாக்கி வைத்து வெளியே செல்லும்போது தோதான இடம் பார்த்து வீசி விடுங்கள்.
விளைநிலங்களை தவிர்க்கவும்.

கோடை காலமானாலும் வீசி விடுங்கள்.

பறவைகள் கூட தனக்கு உணவளித்த மரத்திற்கு நன்றிக்கடனாக விதைகளை எச்சமாக விதைத்துச் செல்கிறது.

சாலைதோறும் மரங்களை நட்டு வைக்க அசோகராக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.

இயற்கையை நேசிக்கும் மனமும்,ஆர்வமும்அதற்கான முயற்ச்சியும் இருந்தால் போதும், விதைப்பந்துகள் தயாரித்து விடலாம்.

வளமான பூமிப்பந்து தயார்.

Friday, 19 December 2014

gnanam


புத்துணர்வு தரும் புதினா --- டாக்டர்.சிவகுமரன்

ஹோமியோபதியில் புதினா MENTHA PIPERITA


         சிறிது இடைவெளிக்குப் பின் வாசகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. கடந்த இருமாதங்களாக பெரும்பாலும் பலரும் கேட்கும் கேள்விசளி தொல்லையை எப்படி நீக்குவது?

  இருமல்தும்மல்சைனஸ் பிரச்சினை ஆஸ்த்துமாமூக்கடைப்பு,தொண்டை வலிகாய்ச்சல் மற்றும் பிற சுவாச கோளாறுகள் பற்றியே உள்ளது. குளிர்ந்த காற்று பட்டாலே பிரச்சினை செய்கிறதாசுலபமாக உங்கள் வீட்டிலேயே குணப்படுத்திக் கொள்ளலாம்.

சனிப் பெயர்ச்சிக்குப் பயப்படாதவர்கள் கூட பக்கத்திலிருக்கும் நபரிடமிருந்து இருமல்சளிதனக்கு பெயர்ந்து விடுமோ எனப்பயந்துஇடம் பெயர்வது வாடிக்கை தான். ஆனால் அது தேவையே இல்லை. மருத்துவரைத் தேடிப்போகவும் வேண்டியதில்லை.

ஒரு கைப்பிடியளவு புதினா இலையை எடுத்து 250 மி.லி நீரில் போட்டு நன்கு கொதிக்கவிடவும், கமகம என நறுமணம் பரவிவிடும். அத்தகைய நறுமணமுள்ள நீராவியை (ஆவிபிடித்தால்) முகர்ந்து மூச்சை உள்ளிழுத்தால் போதும் இந்த குளிர்காலத்தில் வரும் வைரஸ்நோய்கள் ஓட்டம் பிடித்து விடும். ஆம் புதினா சுவாசம் - புத்துணர்வு சுவாசம்.

தினமும் காலை எழுந்ததும் வீட்டில் உள்ள அனைவரும் ஒரிரு நிமிடங்கள் செய்தால் போதும். உடலும்மனமும் புத்துணர்வோடு சுறுசுறுப்பாக இருப்பதோடு சளிஇருமல்காய்ச்சல் வரவே வராது.

ஆஸ்த்துமா போன்ற தீவிரப் பிரச்சினை உள்ளவர்கள் 1 ()2மணி நேரத்திற்கு ஒருமுறையோ அல்லது தேவைப்படும் போதோ இவ்வாறு செய்யலாம். இதன்மூலம் இன்ஹேலர்களை தவிர்த்துவிடமுடியும். அதே நேரத்தில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தப் பால்இட்லிமாவு பயன்படுத்துவதை தவிர்ப்பது நன்மை தரும்.

ஒரு மணி நேரம் கழித்து மீதமுள்ள ஆறிய புதினா வடிநீரை வாயில் ஊற்றி கொப்பளித்து துப்பினால் வாய் நறுமணத்தோடு திகழும். பல் பிரச்சினைகள் அறவே நீங்கி விடுவதை அனுபவத்தில் கண்டு மகிழலாம்.

குறிப்பாக அதிகாலை பிரம்மமுகூர்த்த நேரத்தில் எழுந்திருப்பவர்களுக்கு புதினா நீராவி மிகுந்த பயன்தரக்கூடியது.

மீதமுள்ள புதினா வடிநீரை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால் உடல்வலிசோர்வுஅசதி நீங்கி புத்துணர்வு பெறுவதை உடனே உணரலாம். தோல்நோய்கள்ரிப்பு நீங்கி தோல் புத்துணர்வு பெறும்.

மேலும் வீட்டில் உள்ள ஜன்னல்களை மூடிவிட்டு புதினா நீராவியை வீடுமுழுவதும் பரவச்செய்தால் கொசு மற்றும் பிற பூச்சிகள் ஓடிவிடும். வீடும் நறுமணத்தோடு திகழும்,அதுமட்டுமல்ல மனச்சோர்வை நீக்கி புத்துணர்வு தருவதில் புதினா மிகச்சிறப்பானது.

பல்வேறு குரலிசைக் கலைஞர்கள்மேடைப்பேச்சாளர்கள்MENTHA PIPERITA  என்ற ஹோமியோபதி மருந்தை பாடுவதற்கும் பேசுவதற்கும் முன்பாக உபயோகிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அது வேறு ஒன்றுமல்ல புதினா தான். புதினா ஜீரணத்தை தூண்டும் என்பது நாம் யாவரும் அறிந்ததே. கர்ப்பகாலத்தில் வரும் வாந்தியை புதினா இலைகளை முகர்ந்து பார்த்தாலேயே தடுத்துவிடமுடியும்.

உங்கள் குழந்தைகள் காலையில் நேரமாக எழுந்து படிக்க வேண்டும் என விரும்புகிறீர்களாபுதினா நீராவி நறுமணம் அவர்களுக்கு செல்லும்படி செய்து விட்டால் போதும்உடனே எழுந்து சுறுசுறுப்பாக படிப்பதை கண்கூடாக காணலாம். புதினா வடிநீரோடு சிறிதளவு சாதாரண சுடுநீர் சேர்த்து சிறிது தேன்கலந்து சாப்பிடவும் செய்யலாம்.

புதினா இலைகளைப் பறித்த குச்சிகளை சிறிதளவு மண்சட்டியிலோ அல்லது இடத்திலோ நட்டுவைத்தால் விரைவாக வளர்ந்து நல்ல பலன் தரும்.

புதினாவைப் புதிய கோணங்களில் பயன்படுத்தி புத்துணர்வோடு வாழுங்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அமைதியும் ஆரோக்கியமும் ஓங்கட்டும்.

(பின்குறிப்பு : புதினா இலைகள் புதிதாக கிடைக்காதவர்கள் அருகில் உள்ள ஹோமியோபதி மருந்துக் கடைகளில் MENTHA PIPERITA – Q- 10ml வாங்கி பயன்படுத்தலாம்.)   
for more reference materia medica j.h.clarke
 டாக்டர்.சிவகுமரன், மதுரை
9842477482

Tuesday, 18 February 2014

SMART homoeocare

SMART homoeocare


www.facebook.com/bestdoctor

Genuine homeopathic clinical research center is dedicated to the service of providing the care of Genuine Homoeopathy to the diseased community. It aims at providing wholesome care including diet-tic counselling, psychological help, and help for spiritual enhancement.
Genuine homeopathic clinical research center also runs a Center for Excellence in Homoeopathy, which aims at providing higher level of practical education to all the budding homoeopaths.

The uniqueness of Genuine homeopathic clinical research center lies in that the treatment is offered in strict adherence to the principles and instructions laid down by the Founder of Homoeopathy, Dr. Samuel Hahnemann. The genuineness is in no situation compromised, the result is that our patients and students get the real taste of GENUINE HOMOEOPATHY.

Genuine Homeopathy Clinic and Research Center, is an institution dedicated to provide The Real Cure. It is a group of institutions run by young expert properly trained homeopathy physicians. Genuine homeopathic clinical research center also runs Center For Excellence In Homeopathy for homeopathy graduates and provides deep and actual understanding on Organon and the other literature's of homeopathy.

Genuine homeopathic clinical research center is currently situated at three centers in the southern part of India and is rapidly spreading its roots in the other parts of India.

Homoeopathy is the most gentle system of medicine. The uniqueness of Homoeopathy is that it aims at CURING the patient and NOT just palliating the disease. It is a general public opinion that Homoeopathy takes a long time to cure a disease, which is just a delusion. In reality, Homoeopathy can cure or begin a cure as soon as the medicine comes in contact with the patient but this can happen only in the hands of a genuine Homoeopath, who follows the principles and instructions laid down by Dr. Samuel Hahnemann, The Founder of Homoeopathy.

Doctor. Sivakumaran
Genuine Homeopathy Clinical Research Center
(Center for Excellence in Homoeopathy )
37,SBOA colony bypass road
MADURAI
TAMILNADU
INDIA 625010
ph;0091 9842477482

Mail. doctorsivakumaran@gmail.com


www.doctorsivakumaran.blogspot.com

MODES OF CONSULTATION:

IN Genuine homeopathic clinical research center

Face-to-face: can consult at the below given address with a prior appointment on phone. 00919842477482

Through phone: can consult through phone by calling the number 00919842477482

Best preferred timings:
Morning: 9am-10am (IST) & Evening: 5.30pm-6.30pm (IST)

Through E-mail: doctorsivakumaran@gmail.com
Mail. apsivakumaran@gmail.com

www.homoeopat.blogspot.com

www.doctorsivakumaran.blogspot.com

Monday, 24 June 2013

”ஞானம்” என்றால் என்ன?.

                                               ”ஞானம்” என்றால் என்ன?.


வணக்கம்,


”குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும்
முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்”

என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு.

காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை. ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு புண் வந்துவிட்டால் போதும். அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும்.

அதுபோலத் தான் மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்வதும்.

அந்த குரங்கு கொஞ்சம் பொறுமையாய் புண்ணை நோண்டாமல் இருந்தாலே போதும் புண் விரைவில் ஆறிவிடும்.

இதை குரங்குக்கு சொன்னாலும் புரியாது. அது புண்ணை நோண்டுவதை நிறுத்தப்போவதில்லை.

ஆனால்,

மனிதன் புரிந்து கொள்ள முடியும் தானே?

மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் வாழமுடியும் தானே?

 மனிதமனம் வெறும் “மனம்” மட்டுமே… மனிதமனம் குரங்கு அல்ல… என்ற புரிந்து கொள்ளுதல் தான் ”ஞான உதயம்”.


இந்த புரிதல் எப்போதும் இயற்கையில் எதிர்பாராத தருணங்களில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

இதில் புரிந்து கொள்வது எல்லாமே சீடர்கள். புரிய வைப்பவை எல்லாமே குரு. இந்த மொத்த நிகழ்வும் ”ஆன்மிகம்” எனப்படுகிறது, அவ்வளவுதான்.


     தத்தாத்ரேயர் எனும் அவதூதர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, யது என்ற மன்னனைச் சந்தித்தார். 

தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்ட அவன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார்? என்பதையும் கேட்டான்.
"எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார் தத்தாத்ரேயர்.

இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.

அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று, சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும், நாட்டியக் காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப்பவன், சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...' என்றார் தத்தாத்ரேயர். 

மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...

"மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;

தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.

பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.

எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ உணர்த்தியது;

பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் தெரிவித்தது.

"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மெய்ப்பொருள் ஒன்றாக இருந்தாலும் மனம் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.

"வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.

"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.

பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.

பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.

"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.

பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது. 

இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.

"பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின், இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள். யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள். இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதை புரிந்து கொண்டேன்.

"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்...' என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.

இதைக் கேட்ட அரசன், பூரண அமைதி அடைந்தான்..

தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே.. 

தத்தாத்ரேயரின் ”அவதூதகீதை”  ரமணர், ராமகிருஸ்னபரமஹம்சர் போன்ற பல மஹான்களால் சீடர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அத்வைத கிரந்தமாகும்.  

நல்ல சீடனுக்கு எல்லாமே குரு தான்.

இப்போதைக்கு இது போதும். வாழ்க வளமுடன்.


                        டாக்டர்.சிவகுமரன்.

Wednesday, 3 April 2013

Ques:WHY ARE ONLY YOU ENLIGHTENED AND FOR EXAMPLE NOT ME, OR THE POPE, OR THE WHOLE WORLD?


Ques:WHY ARE ONLY YOU ENLIGHTENED AND FOR EXAMPLE NOT ME, OR THE POPE, OR THE WHOLE WORLD?
Add caption


OSHO:Why are only you the journalist? why not me? why not the pope? 
why not Ronald Reagan? Do you think these are questions worth answering? That's why I have to see them. Idiots are all around.One thing I must say: there was another man who was enlightened who died just a few days ago, J.Krishnamurti. The question of "Why?" you should ask yourself. Why are you miserable? Why are you sleeping when you have the capacity to be awake? Perhaps you are having a beautiful dream: perhaps you are making love to your neighbor's wife, and you don't want to be awakened.I simply decided that if sleep is going to be my existence, it is not for me, because it is almost close to death. Either I have to be awakened or dead, but I will not be in the limbo of a sleepy existence.When you move like a robot, work like a robot, live like a robot and one day die like a robot, you have not decided it. The burden is on you to prove why you have not decided to be enlightened.And you have some guts. You are asking me... It is only a question of decision, decision to be free, decision to be awake, decision to be blissful whatever the cost. You are not ready to pay the cost; that's why you are not enlightened.The cost means I had to lose my family, I had to lose my nation, I had to lose my religion, I had to lose everything. But I was ready: whatever the cost I am going to be enlightened. It happens only in your absolute aloneness, and for that aloneness you have to drop many things which you think are very valuable. You have to drop respectability, you have to drop ambition, you have to drop false knowledge, you have to drop your ego.If you are ready to do it, you can become enlightened this very moment. Not even a single moment does it have to be postponed.Enlightenment is your nature.You already have it; you are just not aware of it.~OshO.♥