Monday, 18 March 2013

நல்வழி

ஔவையாரின் நல்வழி 




வாழ்க்கைக்கு நல்வழி காட்டும் 41 வெண்பாக்களையுடைய நூல்,

கடவுள் வாழ்த்து

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.



நூல்

புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை

மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்- எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல். 1

சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் -மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார்இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி. 2

இடும்பைக்கு இடும்பை இயல்பு உடம்பு இது அன்றே

இடும் பொய்யை மெய் என்று இராதே - இடும் கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு. 3

எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்ய ஒண்ணாது

புண்ணியம் வந்து எய்த போது அல்லால்-கண் இல்லான்
மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு. 4

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா

பொருந்துவன போமின் என்றால் போகா-இருந்து ஏங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து
துஞ்சுவதே மாந்தர் தொழில். 5

உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர் சுகம்

கொள்ளக் கிடையா குவலயத்தில் வெள்ளக்
கடல் ஓடி மீண்டு கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு. 6

எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு

பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை - நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம் கமல நீர் போல்
பிரிந்திருப்பர் பேசார் பிறர்க்கு. 7

ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்

கூட்டும்படி அன்றிக் கூடாவாம்-தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம். 8

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்ஆறு

ஊற்றுப் பெருக்காம்உலகு ஊட்டும்-ஏற்றவர்க்கு
நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து. 9

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்

மாண்டார் வருவாரோ? மாநிலத்தீர் - வேண்டாம்
"நமக்கும் அது வழியே; நாம் போம் அளவும்
எமக்கு என்" என்று இட்டு உண்டு இரும். 10

ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்

இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்-ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே!
உன்னோடு வாழ்தல் அரிது. 11

ஆற்றங் கரையின் மரமும் அரசு அறிய

வீற்றிருந்த வாழ்வும் வீழும் அன்றே - ஏற்றம்
உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர்
பழுது உண்டு வேறு ஓர் பணிக்கு. 12

ஆவாரை யாரே அழிப்பார்? அது அன்றிச்

சாவாரை யாரே தவிர்ப்பவர்? ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்?
மெய் அம்புவி அதன் மேல். 13

பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்

இச்சை பல சொல்லி இடித்து உண்கை - சீச்சி
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர் விடுகை சால உறும். 14

சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு

அபாயம் ஒரு நாளும் இல்லை - உபாயம்
இதுவே; மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும். 15

தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால்

கண் நீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பு அழியா ஆற்றால்; கடல் சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி. 16

செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்

எய்த வருமோ இரு நிதியம்?-வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்! 17

பெற்றார் பிறந்தார் பெரு நாட்டார் பேருலகில்

உற்றார் உகந்தார் என வேண்டார்-மற்றோர்
இரணங் கொடுத்தால் இடுவர்; இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம். 18

சேவித்தும் சென்று இரந்தும் தெண் நீர்க்கடல் கடந்தும்

பாவித்தும் பாராண்டும் பாட்டு இசைத்தும் போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம். 19

அம்மி துணையாக ஆறு இழிந்தவாறு ஒக்கும்

கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம்-இம்மை
மறுமைக்கும் நன்று அன்று மாநிதியம் போக்கி
வறுமைக்கு வித்தாய் விடும். 20

நீரும் நிழலும் நிலம் பொதியும் நெல் கட்டும்

பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ் நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான். 21

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்

கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்? 22

வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே

பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை. 23

நீறில்லா நெற்றிபாழ்; நெய்யில்லா உண்டிபாழ்

ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ்; பாழே
மடக்கொடி இல்லா மனை. 24

ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. 25

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை

தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம். 26

ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்

அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை
நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல். 27

உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்

எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்த
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான். 28

மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி

இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர். 29

தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்

பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி. 30

இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று; சாலும்

ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய 
வீரத்தின் நன்று விடாநோய்; பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி. 31

ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்

மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும்; தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து. 32

வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில்
பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும். 33

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்

எல்லாரும் சென்றாங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல். 34

பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களும் உளும்

ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு. 35

நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறும் காலத்தில்

கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ
போதம் தனம்கல்வி போன்றவரும் காலம் அயல்
மாதர்மேல் வைப்பார் மனம். 36

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்

அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப் படேல் நெஞ்சேமெய்
விண்ணுறுவார்க் கில்லை விதி. 37

நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்

அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள். 38

 முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்

தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு. 39

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்

மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர். 40

Tuesday, 12 March 2013

remember Swami Vivekananda---We are what our thoughts




On his 150th birth anniversary, as we remember Swami Vivekananda, the monk who obtained sublime greatness at the feet of his Guru - Ramakrishna Paramhamsa, we enlist some pearls of his wisdom, so that we too may get inspired. 

We are what our thoughts have made us; so take care about what you think. Words are secondary. Thoughts live; they travel far. 

All differences in this world are of degree, and not of kind, because oneness is the secret of everything. 

The moment I have realized God sitting in the temple of every human body, the moment I stand in reverence before every human being and see God in him - that moment I am free from bondage, everything that binds vanishes, and I am free. 

That man has reached immortality who is disturbed by nothing material. 

The world is the great gymnasium where we come to make ourselves strong. 

Condemn none: if you can stretch out a helping hand, do so. If you cannot, fold your hands, bless your brothers, and let them go their own way. 

The more we come out and do good to others, the more our hearts will be purified, and God will be in them 

Never think there is anything impossible for the soul. It is the greatest heresy to think so. If there is sin, this is the only sin; to say that you are weak, or others are weak. 

All the powers in the universe are already ours. It is we who have put our hands before our eyes and cry that it is dark. 

First, believe in the world—that there is meaning behind everything. 

Don't look back—forward, infinite energy, infinite enthusiasm, infinite daring, and infinite patience—then alone can great deeds be accomplished. 

This is the first lesson to learn: be determined not to curse anything outside, not to lay the blame upon anyone outside, but stand up, lay the blame on yourself. You will find that is always true. Get hold of yourself. 

I, for one, thoroughly believe that no power in the universe can withhold from a anyone anything they really deserve. 

Fear is death, fear is sin, fear is hell, fear is unrighteousness, fear is wrong life. All the negative thoughts and ideas that are in the world have proceeded from this evil spirit of fear. 

First get rid of the delusion “I am the body”, then only will we want real knowledge. 

We have to go back to philosophy to treat things as they are. We are suffering from our own karma. It is not the fault of God. What we do is our own fault, nothing else. Why should God be blamed? 

Fill the brain with high thoughts, highest ideals, place them day and night before you, and out of that will come great work. 

We must have friendship for all; we must be merciful toward those that are in misery; when people are happy, we ought to be happy; and to the wicked we must be indifferent. These attitudes will make the mind peaceful. 

Character has to be established through a thousand stumbles. 

Each work has to pass through these stages—ridicule, opposition, and then acceptance. Those who think ahead of their time are sure to be misunderstood. 

Whenever we attain a higher vision, the lower vision disappears of itself. 

A few heart-whole, sincere, and energetic men and women can do more in a year than a mob in a century. 

Work and worship are necessary to take away the veil, to lift off the bondage and illusion. 

Man comes from God in the beginning, in the middle he becomes man, and in the end he goes back to God. 

He is an Acharya through whom the Divine Power acts. 

Despondency is not religion, whatever else it may be. By being pleasant always and smiling, it takes you nearer to God, nearer than any prayer. 

The greatest men in the world have passed away unknown. Silently they live and silently they pass away; and in time their thoughts find expression in Buddhas or Christs, and it is these latter that become known to us. 

Friday, 8 March 2013

Gnanavanam ஞானவனம்: FIVE TYPES OF FOOD


FIVE TYPES OF FOOD









The non-vegetarian  foods come under this fourth category. Nonveg. foods contain 100% nutrients. So, they get 100 marks for nutrients.There will be no pranic energy in them. So, they get no marks for pranicenergy. There will be no taste in them. So, they get no marks for taste.So, non-veg. foods get a total of 100 marks. Therefore, it is good toavoid or reduce non-veg. foods as far as possible.But, in some countries, desert areas and hot countries, due to thenon-availability of plant foods, there may be a necessity to eat non-veg.foods. Anatomically, nothing wrong will happen to our body if we eatnon-veg. food. But,  on spiritual grounds, if our mind has developed athought that it is a sin to kill a living being, when we eat non-veg. food,that thought will create disease in our body.So, when non-veg. eaters eat the non-veg. food with the thoughtthat eating it is not a sin and eat it without any confusion in their mind,then the food gets digested properly. If they eat it with the dilemma“Can I eat it or not? Is  it right or wrong to eat it?” then that thoughtcreates diseases in the body.This is not only true for non-veg. foods but it is true for all foods. Ifwe eat any food with the clear and strong conviction and belief that it isgood for our health, then that food acts as medicine. If we eat it withthe doubtful thought that it might create disease in our body, it actuallycreates diseases. Finally, it is advisable to avoid non-vegetarian foods.


All the narcotic drugs belong to this group. These are actually notfoods. We eat some narcotics and intoxicants as if they are food items.But those items are not foods. All intoxicants such as tea, coffee, Beedi,cigarette, liquor, Beeda, Ganja, areca nut, etc. are not at all foods.How to know the difference between intoxicants and food items?All those items by eating which thrice daily we can remain alive arefood items. If we cannot remain alive just by eating some items thricedaily, then those items are not food items.Can a person remain alive just by eating coconut alone? Yes. Thencoconut is a food. Can a person remain alive just by smoking cigarettes?No. Then cigarette is an intoxicant. A person can live just by eating nonveg. food alone. So, non-veg. items are food. Can a person live just bysmoking Ganja? No. Then, it is an intoxicant.Food is an item which carries nutrients from outside into ourbody.  Intoxicant is an item which  takes away the nutrients alreadystored in our body. Therefore, when we use  a narcotic, our body willget more stamina for some specific period of time. After that, we willbe without stamina. This is because the  narcotic will  spend away thenutrients already stored in our body and thus make us less potent.Moreover, narcotics never supply any nutrients to our body.Therefore, we should never  consume narcotics at all. Manypeople say, “I go to the doctor and take treatment for several years. Butmy disease has not been cured.” But, these people never revealanything about the  narcotics they use. Therefore,  consuming tea,coffee, etc. is more injurious to our health than eating non-vegetarianfood.  

வாழ்வின் தலைசிறந்த தத்துவம்




”இருப்பதை வைத்துக் கொண்டு இல்லாததைப் பயன் படுத்து!’ 

சீன ஞானி லாவோட்சு சொல்லியிருக்கிற இந்த தத்துவம் என்னை யோசிக்க வைத்தது.

களிமண்ணால் பானை செய்கிறோம். பால் பொங்குவது வெற்றிடத்தில். 

பானை உடைந்தால் சோறு பொங்க முடியாது. ஆகவே பானை தேவை.

 “இருக்கிற பானையை வைத்துக் கொண்டு இல்லாத வெற்றிடத்தைப் பயன் படுத்து’ என்கிறார் அந்த ஞானி.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.


 கதவு, ஜன்னல் வைத்து வீடு கட்டினாலும் நாம் வாழ்வது உள்ளே இருக்கிற வெற்றிடத்தில்தான்! 

இன்னும் சொல்லப்போனால் கடவுள் என்பதே ஆற்றல் மிகுந்த ஒரு வெற்றுத் தன்மைதான்!”

மனித நேயம்



“”ஆந்திராவில் புயல்… அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அநேகம் பேர். அதற்காகப் புயல் நிவாரண நிதி தமிழ்நாட்டில் திரட்டப்படுகிறது.

கல்லூரி மாணவர்கள் கையில் உண்டியலுடன் நிதி திரட்டினார்கள்.
சிவகாசி பக்கத்தில் ஒரு பேருந்து நிலையம். மாணவர்கள் உண்டியலை நீட்டுகிறார்கள். மக்கள் காசு போடுகிறார்கள். 

அங்கே பிச்சையெடுத்துக் கொண்டிருந்த ஒருத்தர், “என்ன விஷயம்?’ என்று விசாரித்தார்.

“ஆந்திராவில் வீடிழந்தவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கவும், பசியால் வாடுகிறவர்களுக்கு சாப்பாடு போடவும், ஆடை இல்லாதவர்களுக்கு ஆடை கொடுக்கவும் இந்தப் பணம் உதவும்’ என்று சொன்னார்கள். 

அந்தப் பிச்சைக்காரர் யோசித் தார். “கொஞ்சம் இருங்க’ என்று சொல்லிவிட்டு தமது பழைய துணியைப் பிரித்தார். தம்மிடம் அதுவரை சேர்ந்திருந்த அவ்வளவு காசையும் மாணவர்களிடம் கொட்டிவிட்டுத் திரும்பிக்கூட பார்க்காமல் அவர் பாட்டுக்கு நடந்து போனார்.

இது சில ஆண்டுகளுக்கு முன்னால் பத்திரிகைகளில் வந்த ஓர் உண்மைச் செய்தி.”

Tuesday, 5 February 2013

சத்தியமே வெல்லும்!

சத்தியமே வெல்லும்!

சுவாமி விவேகானந்தர் பேசுகிறார்...



































































ஒரு சமயம் நான் காசியில் இருந்தபோது ஒரு பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தேன். அந்தப் பாதையின் ஒருபுறம் நீர் நிறைந்த பெரிய குளமும், மறுபுறம் உயர்ந்த சுவரும் இருந்தன. குரங்குகள் பல உலாவும் இடம் அது. காசியின் குரங்குகள் பற்றியோ கேட்கவே வேண்டாம், மிகவும் பொல்லாதவை! இப்படி நான் நடந்து சென்று கொண்டிருக்கையில் அங்கிருந்த குரங்குகளுக்கு நான் அவ்வழியில் செல்வது பிடிக்கவில்லை போலும். நான் செல்லச் செல்ல அவை கிறீச்சிட்டுப் பெரும் சத்தமிட்டபடி என் கால்களை கௌவிக் கொண்டன. நான் தப்பித்து ஒட்டமிட்டேன், அவையும் பின்தொடர்ந்து துரத்தின. நான் வேகமாக ஒடினால் அவையும் அதைவிட வேகமாக துரத்தி வந்து என்னை கடித்தன. இதற்கு மேல் இக்குரங்குகளிடமிருந்து தப்பிக்க வழியே இல்லை என்று நான் நினைத்தபோது அவ்வழியில் வந்த ஒருவர், குரங்குகளை எதிர்த்து நில் என்று என்னைப் பார்த்து கூவினார். அவர் சொல்படி நான் திரும்பி நின்று குரங்குகளை எதிர்த்தபோது அவை பின்வாங்கி ஒட்டம் பிடித்தன. வாழ்க்கை முழுமைக்கும் இது தான் படிப்பினையாகும் - எது உன்னை அச்சம் கொள்ளச் செய்கிறதோ அதை அஞ்சாமல் எதிர்த்து நில்.









மக்கள் பொதுவாக தங்கள் வாழ்வின் குறைபாடுகளுக்கெல்லாம் மற்றவர்களே காரணம் என்று பழி சுமத்துகிறார்கள், அது முடியாவிட்டால், கடவுள் மீது பழி சுமத்துகிறார்கள். அல்லது புதிதாக பேய் பிசாசு என்று கற்பித்துக்கொண்டு அதை தலைவிதி என்று சொல்கிறார்கள்…. விதி எங்கிருந்து வந்தது? விதி என்றால் என்ன? எதை விதைத்தோமோ அதைத் தான் அறுவடை செய்கிறோம். நம் தலைவிதியை எழுதுவது நாமே தான், அதற்கு வேறு எவர் மீதும் பழிசுமத்த வேண்டியதில்லை, வேறு எவரையும் புகழவும் வேண்டியதில்லை. காற்று வீசுகிறது, எவரெவர் தத்தம் பாய்மரத்தை அதற்கு சாதகமாக வைத்துக் கொள்கிறார்களோ அவர்கள் முன்னேறுகிறார்கள். பாய்மரத்தை சுருட்டி வைத்துக் கொண்டவர்களோ எங்கும் செல்வதில்லை, இது காற்றினுடைய குற்றமா?